search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள்பை"

    • அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
    • மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்குட்ட வார்டுகளில் தீவிர தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் சுதர்சனன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் வரவேற்றார். மக்கும் பொருட்கள், மக்காத பொருட்களை பிரசார வாகனத்தில் கண்காட்சியாக வைத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    பெண்களிடம் இலவசமாக மஞ்சள் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துணைத்தலைவர் லதா கண்ணன், வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி, நிஷாகவுதம், சமூக ஆர்வலர்கள் முனியாண்டி, மில்லர் இளமாறன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வார்டு பகுதிகளில் இயற்கை வளம் காக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. தீவிர தூய்மை பணி பிரசாரத்தில் துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி கணக்கர் கண்ணம்மா, சோனை, அசோக், மேஸ்திரி சுந்தரராஜன், பால்பாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.

    • ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தலைமை தாங்கினார்.

    விழாவில், இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சிவக்குமார், தே.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சித்ரா, மற்றும் உறுப்பினர்கள் வனிதா,தொரை,காமராஜ்,சிவசுப்ரமணியம்,சந்தோஸ்,சரோஜா,லட்சுமி,சாரதா, ஜெயபால்,தமிழ்வாணி,தர்மராஜ்,பாலகிருஷ்ணன்,கல்பனா,பிரேமா,ஷீலாராணி,அஞ்சலி,லட்சுமி,கிட்டான்,ஷகிலா,ராஜா மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×