search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் பை"

    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பெரிய பள்ளிவாசலில் நம் பூமியில் முதலீடு செய்யுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் நெகிழி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் மக்களிடம் நம்மை தாங்கும் பூமியை பாதுகாப்பது நம் கடமை, இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், மூட்டை மற்றும் பொட்டலம் கட்டுவதற்கு நெகிழி பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பிளாஸ்டிக் குப்பிகளில் அடைக்கப்பட்டுள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது, உங்களுக்கே அது ஆபத்தை விளைவிக்கும், வீணாகும் உணவு மற்றும் காய்கறிகளை நெகிழி பைகளில் அடைத்து தூக்கி போடக்கூடாது, விலங்குகள் அதை சாப்பிட்டால் குடலடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும், எங்கு சென்றாலும் துணிப்பைகளை எடுத்துச் செல்லுங்கள், மலை மற்றும் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் போது நெகிழி பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனசரகத்திற்குள் தூக்கி போடக்கூடாது, அது தீமைகளை விளைவிக்கும்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா தமிழகமாக மாற்றுவோம் என்று கூறினர். பிறகு 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்தும், மஞ்சப்பைகளையும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமேஷ் பாபு முன்னிலை வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பரமத்தி சட்டப் பணிக்குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பிரபாகரன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது நீதிபதிகள் பேசும்போது, பரமத்தி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளில் சூடான பொருட்களை வாங்கி கொண்டு சென்று சாப்பிடும் போது மனிதனின் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். பிளாஸ்டிக் பைகள் கால்வாய் மற்றும் ஆறுகளில் தண்ணீரில் மிதந்து செல்லும்போது கால்நடைகள் தண்ணீரை குடிக்கும் போது தண்ணீரில் மிதந்து வந்த பிளாஸ்டிக் பைகள் கால்நடையின் உடலுக்குள் சென்று கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசி வணிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் .

    அதே போல் பொதுமக்கள் கடைக்கு வரும்போது மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் வழக்கறிஞர்கள், வார்டு கவுன்சிலர்கள், வணிகர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை செய்தார்.

    • பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.

    உடுமலை :

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கேரள மாநிலம் மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.மலைமேலுள்ள தீர்த்த கிணற்றில் நீர் எடுத்து அவுல், பச்சரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

    மலையடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக வரிசை தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்திலேயே, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை மற்றும் காகித பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சுற்றுப்பயணத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் வெள்ளகோவிலில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி வாணி, வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் வாரிசு அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன உத்தரவை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் நெகிழி பைகளை ஒழிக்கும் வகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மஞ்ச பைகளை வழங்கினார்.

    • தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை வாழை இலை, உலோகத்தாலான குவளைகள் போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்,திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பல்லடம் நகராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் கடை வீதியில், பிளாஸ்டிக் பைகளை கொண்டுவந்தவர்களிடம், அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இனி இதுபோல பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனிதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர், மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.
    • மாணவர்கள் பிளாஸ்டிக்கின் தீமைகள், மஞ்சள் பை நன்மைகளை தெரிவிக்கும் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் மாரித் தங்கம் வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் மாணவர் பேரணியை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பற்றியும் மாணவர்கள் பிளாஸ்டிக்கின் தீமைகள், மஞ்சள் பை நன்மைகளை தெரிவிக்கும் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

    தமிழ் ஆசிரியை அழகு மகேஸ்வரி நன்றி கூறினார். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏஞ்சல் மலர் மெரினா, வீரலட்சுமி, சகாயம், வர்மா, பெர்ஜிலின், ஹெலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர்.
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி காலில் சக்கரம் மாட்டி சென்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் விழிப்பு ணர்வு பேரணியை அட்லா ண்டிக் பன்னாட்டு பள்ளி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிலம்புச்செல்வன் தலைமையில் புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி சேதுசாலை, அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக நகரின் முக்கிய வீதியில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

    பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர். பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சாமியப்பன், நிமல் ராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அருகில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றினர். பேரணியில் மாணவர்கள் காலில் சக்கரம் மாட்டி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைபொது மக்களிடம் வழங்கினர். 

    • கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை.
    • கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் குப்பை எனது பொறுப்பு.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் இன்று காலை பேரூராட்சி நிர்வாக இணை இயக்குனர் மலையான் திருவடிகாரி தலைமையில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை என்று மக்காத குப்பை தரம் பிரித்து கையாளுவது குறித்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ் வந்த்ராவ், வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று வீடுதோறும் என் "குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரிக்க அறிவுறுத்தினர்., தொடர்ந்து கடற்கரை கோயில் எதிரில் விழிப்புணர்வு வீதி நாடகம், மீண்டும் மஞ்சள் பை பயன்பாடு பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது.

    • சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவடடம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் நாகூர் சித்திக் கலந்து கொண்டார்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் "ஒரே ஒரு பூமி "என்ற தலைப்பில் பிளாஸ்டிக் மாசுபாடு, காற்று மாசுபாடு அவற்றை தவிர்க்கும் முறைகள் பற்றி மாணவ -மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    2021- 22 ஆம் கல்வியாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    பள்ளியின்தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.

    ×