search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தொகை கணக்கெடுப்பு"

    • கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன' என்றார்.

    பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை மத்திய அரசு சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    மத்திய அரசு மக்கள் தொகை கண்கெடுப்பை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பிறந்த இடம், மாநிலம், பெயர், ஆதார் எண் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

    பல்வேறு தரப்பில் இருந்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான கணக்கெடுப்பை சாதி அடிப்படையில் எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
    ×