search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்"

    • நுண்கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் குழு மூலம் பொதுமக்களிடம் கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
    • மக்களின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் .

    திருப்பூர் :

    தனியார் நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதில் உள்ள குறைகளை கண்டித்து திருப்பூர் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது .

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் க.பிரகாஷ் தலைமை தாங்கினார் . அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் . நிறுவனத்தலைவர் இப்ராகீம் பாதுஷா சிறப்புரையாற்றினார் . இதில் , சில நுண்கடன் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் குழு மூலம் பொதுமக்களிடம் கடன்களை வலுக்கட்டாயமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.கடனில் சிக்கி தவிக்கும் மக்களின் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் . இது போன்றவர்களை போலீசார் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டல செயலாளர் பிரகாஷ் , பொதுச்செயலாளர் வேல்முருகன் , தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , அமைப்பாளர் மணி மாறன் , ஆலோசகர் அபுதாஹிர் , இளைஞரணி தலை வர் பாரூக் , செயலாளர் ராஜ்குமார் உள்பட மாநில , மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

    ×