search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் சந்திப்பு"

    • ராஜபாளையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்க முகாமில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்துவரும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்" என்ற தலைப்பில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது எம்.எல்.ஏ. நிதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்படும் என்றார்.

    இந்த முகாமில் இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல், புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், நகர கவுன்சிலர் அருள் உதயா, ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், ராமசுப்பு, ராம்நாத், மாரி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×