search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்"

    • முதியோர் உதவி தொகை, உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 242 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
    • 16 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சாலை வசதி, மின்சார வசதி, முதியோர் உதவி தொகை, உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 242 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 பேருக்கு ரூ.49 ஆயிரத்து 780 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×