search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்க டியை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் ரவுண் டானா அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து செட்டி குளம் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முன்புறம் உட்பட ஒரு சில இடங்களில் ரவுண் டானா அமைக்க மாநக ராட்சி அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முன்புறம் ரவுண்டானா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் மேற் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று அந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு அதிரடி நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சாலை கள் அனைத்தும் இருவழிச் சாலைகளாக மாற்ற நடவ டிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது தொடர் பாக பட்டா நிலம் வைத்தி ருப்பவர்களிடமும் பேசி யுள்ளோம். விரைவில் அனைத்து சாலைகளும் இருவழி சாலைகளாக மாற் றப்படும். இருவழிச் சாலை களாக மாற்றப்படும் பட்சத் தில் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் ரவுண்டானா பணி இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. அந்த ரவுண்டா னாவில் நினைவு ஸ்தூபி வைப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வரு கிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரியின் முன்புறம் ரவுண்டானா அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று தொடங்கி இரண்டு வார காலத்திற்குள் முடிக்கப்படும்.

    ஆக்கிரமிப்புகள் பார பட்ச மின்றி அகற்ற வும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.கழிவு நீர் ஒடைகள் சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அனைத்து வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழிவு நீர் ஒடைகள் அனைத் தும் சுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து 23 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடந்து சென்றும் மோட்டார் சைக்கிளில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார். செல்ல கண் தெரு, கோர்ட் ரோடு, டதி பள்ளி ரோடு, பால் டேனியல் தெரு, வாட்டர் டேங்க் ரோடு, கே.பி. ரோடு, கலைமகள் தெரு, பர்வத வர்த்தினி தெரு, பெரிய நாடார் தெரு, ராமன் பிள்ளை தெரு, சகோதரர் தெரு, சாந்தான் செட்டிவிளை ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    சில இடங்களில் பொது மக்கள் மேயர் மகேஷை சந்தித்து சாலை சீரமைக்க வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர். இது தொடர் பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

    ஆய்வின் போது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை அகற்றுவதற்கும் அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மாநக ராட்சி என்ஜினீயர் பால சுப்பிர மணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×