என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகன் தலைமறைவு"
- கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார்.
- நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (வயது70). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இவர்களது மகன் கார்த்திக் (38). இவர் கோழி வண்டி லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார்.
கார்த்திக்குக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டார். இதனால் கார்த்திக் அவரது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். நேற்று மாலையில் குடிபோதையில் தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டுக்கு வரும் மின் ஒயரை ராஜி அறுத்து விட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மீண்டும் இரவு 11 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ரிப்பர் கட்டையால் ராஜிவை தாக்கியுள்ளார்.
இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட ராஜிவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த கார்த்திக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகனே தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்