search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசா்ா"

    போலீசாரை கண்டித்து திருவாரூரில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இந்த ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் பெயரை சங்கத்திற்கு தொடர்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்தியதுடன், மற்றொரு ஆட்டோ நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தினர். இதுபற்றி சி.ஐ.டி.யூ. ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனை தொடர்ந்து நேற்று கொரடாச்சேரி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப் பட்டு பஸ் நிலையம் ரவுண்டானாவை அடைந்தனர். அங்கு ஆட்டோ தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் குணசீலி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×