search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் பற்றாக்குறை"

    • தேவகோட்டை நகரில் போலீசார் பற்றாக்குறையால் அதிகாரிகள் திணறுகின்றனர்.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறையில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனை பலமுறை ஐ.ஜி.யிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    காவல்துறையில் திறமையான நல்ல நேர்மையான அதிகாரிகள் இருந்தும் காவலர்கள் பற்றாக்குறையால் தேவகோட்டை நகரில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது.

    குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை பகுதிகளில் தான் அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. மாவட்டத்தில் குறைவான போலீசார் இருக்கிறார்கள் என்றால் அது தேவகோட்டை உட்கோட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்ணங்குடி ஒன்றி யத்தில் பெண்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.நாளுக்கு நாள் நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.

    வழிப்பறியில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கண்ணங்குடி யூனியன் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேவகோட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராம் நகரில் இருந்து ஒத்தக்கடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதுதாகும். ஆனால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆர்.டி.ஓ., நகராட்சி, காவல்துறை 3 துறைகளும் இணைந்தால் மட்டுமே நிரந்தரமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். தேவகோட்டை நகரில் காவலர்கள் பற்றாக்குறையால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாதுகாப்பு அளிக்க எங்களால் தற்போது இயலாத நிலை உள்ளது என்று நகர் காவல் ஆய்வாளர் நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறவில்லை.

    இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    ×