search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் பணியிட மாற்றம்"

    • கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர்- 2 போலீசாரை பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் காளிராஜ்.

    மேலும் இந்த காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் ராமர் பாண்டி மற்றும் சுவாதிராஜ். இவர்களைப் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், போலீசார் ராமர்பாண்டியன், சுவாதிராஜ் ஆகியோரை சிவகங்கை மாவட்டத்திற்கும் பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×