search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் தீவிர சோதனை"

    • கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ரெயில் நிலையங்கள்

    இதையடுத்து நாடு முழுவதும் ெரயில்வே நிலையங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ெரயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் ெரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மோப்பநாய் பவானியை கொண்டு பார்சல் அலுவலகம், டிக்கெட் புக்கிங் அலுவலகம், வாகனம் நிறுத்துமிடம், முதலாவது நடைமேடை பகுதி ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனையிட்டனர்.

    சோதனை

    தொடர்ந்து சேலம்- விருத்தாச்சலம் ெரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். ெரயில்வே ஜங்ஷன் நுழைவு வாயில் பகுதி மற்றும் தண்டவாளங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

    2-வது நாளாக...

    2 -வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் ெரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம், பார்சல் முன்பதிவு செய்யும் இடம், நடைமேடைகள் என பல்வேறு இடங்களில் மோப்ப நாயுடன் சேலம் நகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ெரயில்வே பாதுகாப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்மித், செந்தில்குமார் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கண்காணிப்பு

    இதில் குறிப்பாக பயணிகள் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் ெரயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து.
    • தங்கும் விடுதி, மேன்சன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து.

    இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.

    கோவையில் உள்ள தங்கும் விடுதி, மேன்சன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு போன்ற தங்கும் இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சந்தேகப்படும் நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கண்காணித்து வருகின்றனர். தவிர, மாவட்டத்திற்குள் பல இடங்களில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் சந்தேகப்படும்படியாகவோ அல்லது குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100ஆகியவற்றை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • பொதுமக்களும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.
    • கோவை ரெயில்நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

    கோவை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி பின்னர் திறந்தவெளி வாகனங்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். மேலும் பொதுமக்களும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி வீடுகளில் வழிபாடு செய்வார்கள்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் கோவையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான பணிகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக சிலைகள் வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வது, சிலைகள் வைக்க உரிய அனுமதி பெறுவது, சிலைகள் வாங்கவது என பல்வேறு நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக, கோவையில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் கோவை ரெயில் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் கோவை ரெயில்நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இதேபோல் மக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×