search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசாருக்கு பாராட்டு"

    • அப்பநாயக்கன்பட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் வீட்டில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் திருட்டு போனது.
    • கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் வீட்டில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அதிகாலை சூலூர் பழைய பஸ் நிலையம் நிலையம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த முபாரக் அலி, பீளமேட்டை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் தொட்டிபாளையம் ஆத்தி குட்டையை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் அப்பநாயக்கன்பட்டி மற்றும் நீலம்பூர் அண்ணா நகர், மைலம்பட்டி தனம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 32 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.6 லட்சம் பணத்தை மீட்டனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அப்பநாயக்கன்பட்டி பகுதி பொதுமக்கள் பாராட்டினர். தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் காமிராக்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அவர்களது வீட்டில் காமிராக்களை பொருத்துவதாக வாக்குறுதி அளித்தனர்.

    • குன்னூரிலேயே இறங்கி விட்டனர்.
    • 3 மாணவர்களையும் அழைத்து ஒப்படைத்தனர்.

    ஊட்டி,

    கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாலிடெக்னிக்கில் பயின்று வரும் 3 மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். வாய் பேச முடியாத நிலையிலும், காது கேட்காத நிலையிலும் இருக்கக்கூடிய மாணவர்கள் வழி தெரியாமல் தவறான வழிகாட்டுதல் காரணமாக குன்னூரிலேயே இறங்கி விட்டனர். மாணவர்களின் உடமைகள் அனைத்தும் வந்த பேருந்திலேயே ஊட்டிக்கு சென்று விட்டது. இதனை அடுத்து உடனடியாக குன்னூர் காவல்துறையினர் ஊட்டி காவல்துறையினரை தொடர்பு கொண்டு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. ஊட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடைமைகளை மீட்டு அந்த 3 மாணவர்களையும் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் இந்த செயல் அனைத்து தரப்பு மக்களிடம் பாராட்டுதல்களை பெற்றது.

    • 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரே பறிமுதல்
    • பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ரவுடி மதுரை பாலா (வயது 35) என்பவரை வேலூர் ஆயுதபடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் போலீசார் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    அப்போது அவரை அங்கு 5 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் முகத்தில் பெப்பர் ஸ்பிரேயை அடித்துவிட்டு பாலாவை கொலை செய்ய முயன்றனர். எனினும் போலீசார் பாலாவை காப்பாற்றினர். தப்பியோடியவர்களை 5 பேரை போலீசார் துரத்தி பிடித்தனர்.

    அப்போது போலீஸ்காரர்கள் பாரதி, பிரசாந்த், வெங்கடேசன் ஆகியோர் 3 பேரை பிடித்தனர். பாரதி என்பவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

    பிடிபட்டவர்களிடம் இருந்து 3 கத்திகள், பெப்பர் ஸ்பிரேவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பணியின் போது திறம்பட செயல்பட்ட போலீசாரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    ×