search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி கருத்து கணிப்பு"

    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாகிவரும் சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

    இந்த தகவல் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சற்று சஞ்சலத்தையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது.

    இந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரசாரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    வாய்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் அச்சப்பட தேவையில்லை. போலி கருத்துக் கணிப்பு பிரசாரங்களால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கையாக இருங்கள். உங்களது கடுமையான உழைப்பு வீணாகப்போய் விடாது. ஜெய் ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    முன்னதாக, இதேபோல் காங்கிரசாருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியும் இதேபோல் ஆடியோ வடிவில் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

    ×