search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் எதிர்ப்பு"

    • போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச போதை ப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், நெய்வேலி பள்ளிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மற்றும் என்.எல்.சி. ஐ.எல். கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியை, நிறுவன மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மனித வளத்துறை இயக்குனருன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார், கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், மத்திய நூலகத்தி லிருந்து தொடங்கிய இப்பேரணி, மகாத்மா காந்தி சிலை அருகில் நிறை வடைந்தது. பேரணியின் போது, மாண வர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

    • விழுப்புரத்தில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதில் பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். எனவே இதிலிருந்து தமிழக மக்களை போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய பலகைகளை ஏந்தி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இருந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் தயார் செய்து வைத்திருந்த குறுந்தகடினை மாவட்ட நீதிபதி பூர்ணிமா வெளியிட மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட கலெக்டர் மோகன் பெற்றுக் கொண்டனர்.

    பேரணியில் நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்பி ரவி, சமூக நீதி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஆர்கே குபேரன், இ. எஸ் .கல்வி குழுமத்தின்நிறுவனத் தலைவர் புரவளர் சாமிக்கண்ணு, ஆய்வாளர் பத்மஸ்ரீ, உதவி ஆய்வாளர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×