search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள் வழக்கு"

    தூக்கத்திற்காக கஞ்சா பயன்படுத்தியதாக ஆர்யன் கான் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
    மும்பை :

    மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மத்திய விசாரணை அமைப்பான போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். நடுக்கடலில் கப்பல் சென்றபோது நடந்த இந்த சோதனையில், அங்கு போதைப்பொருள் விருந்து நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை விருந்தில் கலந்து கொண்டதாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் சுமார் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்யன் கான் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்குழு சமீபத்தில் சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர்கள் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக்கூறப்பட்டது. இந்தநிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் தனக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, ஆர்யன் கான் சரியாக தூக்கம் இன்றி தவித்துள்ளார். அவர் தனது தூக்க பிரச்சினைக்கு தீர்வு தேடியபோது கஞ்சா பயன்படுத்தினால் தூக்க கோளாறு நீங்க வாய்ப்புள்ளதாக அவர் சில இணைய கட்டுரைகளை படித்துள்ளார்.

    இதற்காக அவர் அங்கு கஞ்சா வாங்கி பயன்படுத்த ஆரம்பித்ததாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் அவர் முன்பு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல ஆர்யன் கான் தனது செல்போனில் நண்பர்களுடன் போதைப்பொருள் குறித்து வாட்ஸ்-அப்பில் உரையாடியதையும், குறுந்தகவல்கள் அனுப்பியதையும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் அந்த உரையாடல்களுக்கும் தற்போது அவர் மேல் பதியப்பட்டுள்ள வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது.

    சோதனையின்போது ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் ஆர்யன் கான் பங்கை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே அவர் சந்தேகத்திற்கிடமின்றி குற்ற சதியில் ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை போன்ற காரணங்களால் ஆர்யன் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    போதைப் பொருள் வழக்கில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய என்.சி.பி. மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயின் குடும்பத்தினர் நேற்று கவர்னரை சந்தித்தனர்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    இரு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியதால் ஆர்யன் கான் தற்போது வெளியில் உள்ளார்.

    ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைவராக சமீர் வான்கடே செயல்பட்டு வருகிறார். ஆர்யன் கான் கைது சம்பவத்தில் இருந்து சமீர் வான்கடே மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    இதற்கிடையே, போதைப் பொருள் விவகாரம் குறித்து மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நவாப் மாலிக் மீது குற்றச்சாட்டுகளை  முன்வைத்தார். நவாப் மாலிக்கின் நிழல் உலகத்துடனான தொடர்பு குறித்த ஆதாரங்களை வெளிப்படுத்துவேன். தீபாவளி கடந்து செல்வதற்காக காத்திருக்கிறேன் என்றார்.

    நவாப் மாலிக்

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    1993ல் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட சலீம் படேல் என்பவரிடமிருந்து குர்லா பகுதியில் 2.8 ஏக்கர் நிலத்தை மாலிக் வாங்கியுள்ளார். இந்த நிலம் நவாப் மாலிக் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் எப்போது நடந்தது என்பதுதான் என் கேள்வி. நீங்கள் மந்திரியாக இருந்தீர்கள். சலீம் படேல் யார் என்று உங்களுக்குத் தெரியாதா? சலீம் படேல் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உதவியாளர் மற்றும் ஹசீனா பார்கரின் (தாவூத்தின் சகோதரி) டிரைவராக இருந்தார்.

    தாவூத் தப்பிய பிறகு, சலீம் படேல் மூலம் ஹசீனா பார்கர் சொத்துக்களை வாங்கினார். 1993 மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம்.

    இது பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு. குண்டுவெடிப்புக்கு சதி செய்தவர்களுடன் நீங்கள் வியாபாரம் செய்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

    போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் மைத்துனி போதைப் பொருள் வியாபாரி என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
    மும்பை:

    சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

    ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தலைமை ஏற்று நடத்தியவர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. 

    இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வெளியில் உள்ளார்.

    போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி என கூறப்படுகிறது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் விஜிலென்ஸ் குழுவினால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் (என்சிபி) சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் (எஸ்ஐடி) பூஜா தத்லானி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

    ×