search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போச்சம்பள்ளி பகுதி"

    போச்சம்பள்ளி பகுதியில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் பிடியில் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில் உள்ளன.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக "மா'' சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் மா விளைச்சளில் போச்சம்பள்ளி தாலுக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகாவில் மழை பொய்தாலும் கேரளாவில் மழை புரட்டி போட்டது. ஆனால்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  உள்ள போச்சம்பள்ளி, வெப்பாலம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் மழை இல்லாததால் மா மரங்கள் காய்ந்து கருகும் நிலையில்  உருவாகியுள்ளது. 

    இந்த நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மா மரங்களை காப்பாற்றினாலும் சில வாராங்களில் மீண்டும் தண்ணீர் இல்லாமல் மா மரங்கள் காய்ந்து விடுகிறது. மேலும், மற்ற பயிர்களை காப்பாற்ற, பாலேகுளி ஏரியில் இருந்து  கூடுதலாக மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பினால், ஆண்டு முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும். 

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி கால்வாய்களை சீரமைத்து போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×