search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொழுதுபோக்கு"

    • மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கம்.
    • புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல.

    வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருசேர எதிர்கொள்ளும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும். மகிழ்ச்சிதான் வாழ்வின் பிரதான அங்கமாக இடம்பிடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். புன்னகையில் வெளிப்படுவது மட்டுமே மகிழ்ச்சி அல்ல. உள் மனம் நிம்மதியை அனுபவிப்பது வெளிப்பட வேண்டும். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...

    * நன்றி உணர்வுடன் இருங்கள். ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதீர்கள். அதுபோல் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். மற்றவர் உதவி நாடி வந்தால் அவர் கேட்கும் முன்பே குறிப்பறிந்து உதவி செய்ய முன் வாருங்கள்.

    * நன்றி உணர்வை கடைப்பிடிப்பது மனதை பூரிப்படைய செய்யும். பிறருக்கு செய்த உதவி பயனுள்ளதாக அமைவதை கண்கூடாக காணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

    * அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடித்தமான செயல்பாடுகளை தொடருங்கள். ஆர்வமுள்ள செயல்களில் ஈடுபடுவது மன திருப்தியை அளிக்கும்.

    * எதிர்மறை சிந்தனைகள் மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனதை திசை திருப்பும் செயல்களில் இருந்தும் விலகி இருங்கள். நேர்மறையான மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். மனம் நிம்மதி அடைந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

    * கடந்த கால நிகழ்வுகளையோ, நடந்து முடிந்த சம்பவங்களையோ திரும்பத்திரும்ப நினைவுக்கு கொண்டு வராதீர்கள். அது இறுக்கமான மனநிலைக்கு இட்டுச்செல்லும். நிம்மதியை தொலைத்து மகிழ்ச்சியை சீர்குலைத்துவிடும்.

    * மன அழுத்தத்தைக் குறைக்கவும், நினைவாற்றல் திறனை மேம்படுத்தவும் தியானத்தில் ஈடுபடுங்கள். எதிர்மறை உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும்.

    * குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவை வலுப்படுத்துங்கள். அவர்களுடனான பிணைப்பு உணர்வுப்பூர்வமானதாக அமையும் பட்சத்தில் மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்க துணைபுரியும்.

    * குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். பயணங்கள் மனதை இலகுவாக்கும். சுற்றுலா இடங்கள் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிக்கொடுக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிக்க வழிவகை செய்யும்.

    * சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப்பழக்கம், போதுமான தூக்கம் என உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

    * தெளிவான, அடையக்கூடிய, அர்த்தமுள்ள இலக்குகளை அமைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான இலக்குகளை பின்தொடர்வது வாழ்க்கையின் நோக்கத்தை பிரதி பலிக்க செய்யும். உள் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க உதவும்.

    • தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.
    • விழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா," 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 45 புத்தக அரங்கு களும், அரசின் பல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட் காட்சியும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும் மாணவ- மாணவிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்க ளின் பட்டிமன்றம், சொற் பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாண வர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளி களுக்கே சென்று மாண வர்களை ஏற்றிவரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும். 

    மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகள், தமிழர் கலாசாரத்தை பறை சாற்றும் வகையி லான கலைநிகழ்ச்சிகளும் நடை பெறும். புத்தக திருவிழா வுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலுக்கு செல்லாத வகை யில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.

    • பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம்.
    • பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பெரியண்ணன் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புதிய பூங்காவினை திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், ஊஞ்சல், சரக்கு ஏற்ற, இறக்க மரம் போன்ற பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.

    விழாவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்திவாசன், சமீராபர்வீன், பிரேம்நாத் பைரன். பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலெட்சுமி, கோட்டையம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    ×