search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியாளர் தூக்குபோட்டு தற்கொலை"

    • யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
    • தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    நல்லம்பள்ளி,

    நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் புதுவீதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோகுல் (19). டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்து விட்டு வீட்டில் தறி வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் அடிக்கடி தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும்,இதனால் கடந்த ஒரு வார காலமாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த அதியமான் கோட்டை போலீசார் கோகுலின் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×