search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்காட்சியை"

    • சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை நடக்கும்போது அரசு பொருட்காட்சி, போஸ் மைதானத்தில் நடத்தப்படும்.
    • கடந்த 28-ம் தேதியில் இருந்து நேற்று வரை 15 நாளில் பொருட்காட்சிக்கு 41,479 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 695 ரூபாய் வசூலாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை நடக்கும்போது அரசு பொருட்காட்சி, போஸ் மைதானத்தில் நடத்தப்படும்.

    ஆனால் தற்போது கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருவதாலும், ேபாஸ் மைதானத்தில் தற்காலிக பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருவதாலும் அரசு பொருட்காட்சியை சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்திற்கு மாற்றினர்.

    நடப்பாண்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை திருவிழா நடந்து முடிந்த நிலையில் கடந்த 28-ந்தேதி புதிய பஸ் நிலைய மாநகராட்சி மைதானத்தில் அரசு பொருட்காட்சி ெதாடங்கியது. இதில் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பார்க்க சேலம் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் மக்கள் வந்து செல்கின்றனர்.

    நுைழவு கட்டமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. கடந்த 28-ம் தேதியில் இருந்து நேற்று வரை 15 நாளில் பொருட்காட்சிக்கு 41,479 பேர் வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 695 ரூபாய் வசூலாகியுள்ளது.சேலம் அரசு பொருட்காட்சியை இதுவரை 41 ஆயிரம் பேர் பார்வைசேலம் அரசு பொருட்காட்சியை இதுவரை 41 ஆயிரம் பேர் பார்வை

    ×