search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்பரப்பி வன்முறை"

    அரியலூர் அருகே பொன்பரப்பி கலவரம் பற்றிய அறிக்கையில் பாமக மற்றும் இந்து முன்னணி மீதான குற்றச்சாட்டு உண்மையாகி விட்டது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #ponparappiissue #thirumavalavan #pmk

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அரியலூர் அருகே பொன்பரப்பி கிராமத்தில் தேர்தல் தினத்தன்று தலித்துகள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல், ஜாதி வன்கொடுமைகள் சம்பவத்தை பல்வேறு தரப்பினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    அதுமட்டுமல்ல பேராசிரியர் லட்சுமணன், பேராசிரியர் கதிரவன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினரும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    அதில் பா.ம.க.வும், இந்து முன்னணியும் சேர்ந்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியது என்பதை உறுதி படுத்தி உள்ளது.

    கலவரத்துக்கு யார் காரணம் என்பதை நாங்கள் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். தேர்தலில் சிதம்பரம் தொகுதி முழுவதும் ஒட்டு மொத்தமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பா.ம.க.வினர் திட்டமிட்டனர்.

    எங்கெங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கெல்லாம் வாக்கு சாவடிகளை கைப்பற்றி பா.ம.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அவர்களின் முயற்சி பலிக்க வில்லை.

    பொன்பரப்பியில் காலை 8 மணிக்கே ஓட்டு போட வந்த தலித்துகளை அச்சுறுத்தி உள்ளனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி அருகே பானைகளை போட்டு உடைத்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் தலித் குடியிருப்பு அருகே விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தின் அருகில் இருந்த பானைகளையும் விட்டு வைக்காமல் உடைத்துள்ளனர்.

    இதை தட்டிக் கேட்ட குணசீலன் என்பவரை பா.ம.க. வினரும், இந்து முன்னணியினரும் தாக்கிய தோடு சேரிக்குள் புகுந்தும் பானை சின்னத்துக்கா ஓட்டு போட்டாய் என கேட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அபாண்டமாக ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். போலீசாரும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வில்லை.

    ஆனால் நான் அந்த கிராமத்துக்கு வரக்கூடாது என்று வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். போலீசார் ஒருதலைபட்சமாக செயல் படுகின்றனர்.

    நெல்லிக்குப்பம் அருகே குச்சிப்பாளையத்திலும் விடுதலை சிறுத்தைக்கு சம்பந்தம் இல்லாத சம்பவத்தை தொடர்பு படுத்தி எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

    என் படமும், டாக்டர் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்ட இரு சக்கர வண்டியில் சென்ற தலித் இளைஞர்களை வழி மறித்து பா.ம.க.வினர் தாக்கி உள்ளனர். வண்டியையும் உடைத்துள்ளனர். தட்டிக் கேட்டவர்களையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    ஆனால் தலித் தாக்கியதாக எங்கள் மீது ராமதாஸ் அபாண்டமாக பழி சுமத்துகின்றார்.


    இப்போது விருத்தாசலம் அருகே திலகவதி என்ற பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.

    இந்த கொலைக்கும் விடுதலை சிறுத்தைக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பெண்ணுக்கும் ‘ஆகாஷ்’ என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், அதனால் அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் எனவும் கூறி போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த வாலிபர்தான் குற்றவாளியா? என உறுதிப்படுத்தாத நிலையில் வழக்கம் போல் ராமதாஸ் பழி சுமத்தி பேசுகிறார். அரசியல் ஆதாயம் பெற குறியாக உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எல்லாவற்றிலும் தொடர்புபடுத்துவதையும் வம்புக்கு இழுப்பதையும் டாக்டர் ராமதாஸ் தொழிலாக கொண்டுள்ளார். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

    திலகவதி கொலையில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விருத்தாசலத்தில் 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ponparappiissue #thirumavalavan #pmk

    பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பொன்பரப்பியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க. சார்பில் ஆவடி அந்திரிதாஸ், திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அரசியல் ஆதாயத்துக்காக பா.ம.க. வன்முறையை உருவாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் அங்கு வன்முறையை ஏற்படுத்தி தலித்துகளை வாக்களிக்க விடாமல் அடித்து விரட்டப்படுகிறார்கள். தலித்துகளின் வாக்குரிமையை தடுக்கும் செயல்களில் பா.ம.க. பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பொன்பரப்பியிலும் வெறியாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். தலித்துகளின் வாக்குகளை தட்டி பறிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்தகைய அராஜகத்தை பா.ம.க. மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

    பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டோம். ஆனால் தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கிறது. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை. பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகளில் தோல்வி அடைவார்கள். அதிக ஓட்டு வித்தியாசத்தில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெறுவார்.

    பொன்பரப்பியில் மறு வாக்கு பதிவுக்கு உத்தரவிட்டு நடுநிலையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் காசி முத்துமாணிக்கம், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, உஞ்சையரசன், பாவரசு, பாலவன், செல்லத் துரை, ஆதவன், இரா. செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
    பொன்பரப்பி வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #VCKProtest
    அரியலூர்:

    தமிழகத்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடும் வன்முறை வெடித்தது. திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதை சிலர் தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டது. மோதலின்போது சுமார் 20 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

    இந்நிலையில், பொன்பரப்பி மோதலுக்கு காரணமான உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மரங்களை வெட்டிப் போட்டு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர்.

    சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி, புழுதிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #LokSabhaElections2019 #VCKProtest
    ×