search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் போராட்டம்"

    • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது
    • அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறி யாளர் ராஜ்குமார், பெரு ந்துறை சிப்காட் திட்ட அலு வலர் வெங்கடேசன், பொறி யாளர்கள் சுஜாதா, வனஜா, சுற்றுச்சூழல் பறக்கும் படை பொறியாளர் வினோத்கு மார், விஷ்ணு பாலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குழுவிற்கு 10 பேர் என்ற முறையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கம் ஒருங்கி ணைப்பாளர் சின்னசாமி தலைமையில் 10 பேர் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பா.ஜ.க. பெருந்துறை நகரத் தலைவர் பூரண சந்திரன் தலைமையில் 10 பேர் 2-வதாக கலந்துக் கொண்டனர்.

    பின்னர் பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் பாதிக்கப்பட்டோர் மக்கள் இயக்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பி னர், விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    சிப்காட் வளாகத்திற்குள் தண்ணீர் எதுவும் வெளி யேறக் கூடாது. அப்படி இல்லை என்றால், அனைத்து கம்பெனிகளையும் மூட வேண்டும். இதுவே எங்களது கோரிக்கை இவ்வாறு அவர்கள் பேசினர்.

    மேலும் சிப்காட் சுற்றி உள்ள குளங்கள் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த குளங்களுக்கு கழிவுநீர் வருவதை ஏன் வருவாய் துறையினர் தடுக்கவில்லை.

    இதற்கு தாசி ல்தார் வந்து பதில் தரவே ண்டும் இல்லை என்றால் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக் கூட்ட அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபாலன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சை வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள மகேஸ்வரி நகர், புவனேஸ்வரி நகர், சுப்பிரமணி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "புதிதாக திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டும் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளது.

    இதையெல்லாம் மீறி டாஸ்டாக் கடையை திறக்க சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

    பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களும், டாஸ்மாக் கடைய திறந்தால் பாதிக்கப்படுபவார்கள் என்றும் எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×