என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
நீங்கள் தேடியது "பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி"
கிருஷ்ணகிரியில் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த 112 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில் நகரில் வசித்து வந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த முனுசாமி கடந்த 1947-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது112). இவரது ஒரே மகன் தன்ராஜ். மருமகள் சரோஜா (96). இவர்களுக்கு 5 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த மே மாத ம் 112-வது பிறந்தநாளை, தனது 74 பேரன், பேத்திகளுடன் கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த லட்சுமியம்மாள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு பேரன், பேத்திகள், உறவினர்கள் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
லட்சுமியம்மாள், சைவம் உணவு மட்டுமே உண்டு, சத்தான காய்கறிகள், கீரைகள், சிறு தானிய உணவுகள் மட்டுமே சாப்பிட்டு வந்து 112 வயது வரை வாழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X