என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது மக்கள் பீதி"
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகில் உள்ள ஏரியில் நேற்றுமுன் தினம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அருகில் முதலை படுத்திருப்பதை சிறுவர்கள் பார்த்தனர். உடனடியாக அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.
இதனால் வங்குடி கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களும் அந்த ஏரியில் குளிக்கச் செல்வதற்கும், துணி துவைப்பதற்கும், கால் நடைகளை குளிப்பாட்டவும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
முதலை கடித்து விடும் என்ற அச்சத்தில் பொது மக்கள் ஏரியில் இறங்காமல் பீதியில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறியுள்ளனர்.
பொது மக்கள் முதலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைப்பண்ணைஅல்லது முதலைகள் வசிக்கும்அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு போய்விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள் வருவாய்துறையினர் தலையிட்டு உடனடியாக இதை செயல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மணப்பாறை:
மணப்பாறையில் சுற்று வட்டாரா பகுதிகளான மணப்பாறை, வீரப்பூர், நல்லான் பிள்ளை, பழைய கோட்டை, கொப்பம்பட்டி, காட்டுபட்டி உள்ளிட்ட 13 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது.
உடனே பொது மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்றனர். இந்த திடீர் சத்தம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.
இது குறித்து பொது மக்கள் கூறுகையில்,
மணப்பாறை வீரமலை பகுதியில் ராணுவ வீரர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது கூட இந்த அளவுக்கு சத்தம் கேட்டது இல்லை. தற்போது அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் நடை பெற வில்லை என்று கூறினர். மேலும் இந்த திடீர் சத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் தெரிய வில்லை என்று கூறினர்.
கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடி சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டது. அது போல மணப்பாறையில் எதுவும் நிலஅதிர்வு ஏற்பட்டதா? என பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்