search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள்"

    • கடலூர் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
    • கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடலுார் மாவட்டத்தில் கஞ்சா , குட்கா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்கும் பொருட்டு உட்கோட்ட காவல் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுரையின்பேரில் கடலூர் மஞ்சக்குப்பம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி, சங்கொலிக்குப்பம் கிராமம் ,சான்றோர்பாளையம், ராசாபேட்டை சுனாமி நகர் , சிதம்பரம் பெரியகுப்பம் கிராமம், கிள்ளை மீனவர் காலனி, விருத்தாச்சலம் புதூர், நெய்வேலி சேப்ளா நத்தம் கிராமம், பண்ருட்டி புறங்கனி கிராமம் , காட்டுகூடலூர் , சேத்தியாதோப்பு செல்லிவிழி கிராமம் , இனமங்கலம் , காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் , திட்டக்குடி பேருந்து நிறுத்தம், நல்லூர் , சிறுபாக்கம் ஆண்டவர் கோவில் ஆகிய போலீஸ் நிலையத்தில் போலீசார்கள் போதை தடு ப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்கள்.கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு , பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் தடைப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , கஞ்சா , குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பற்றி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×