search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரவை"

    • 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் 2023-24 ஆண்டுக்கான மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வா் வசந்தி வரவேற்றாா். கல்லூரியின் தாளாளரும், கோவை மண்டல வீட்டுவசதி துணைப் பதிவாளருமான அா்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், பேரவைத் தலைவியாக ஸ்ரீநிதி (பி.காம்., 3-ம் ஆண்டு), துணைத் தலைவியாக ஹரிணி (பி.எஸ்சி., கணினி அறிவியல் 3-ம்ஆண்டு), செயலாளராக சுரேகா (பி.காம்., 2-ம் ஆண்டு) ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.

    விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை லாா்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் மனித வளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிா்வாகி டெய்ஸி மேரி பேசியதாவது:- மாணவி களுக்கு வாழ்க்கையில் நாம் என்ன ஆகப் போகிறோம் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும். படிப்புக்கு வயது தடை இல்லை. படிப்பை நம்மிடம் இருந்து யாரும் வாங்க முடியாது என்றாா்.

    நிகழ்ச்சியில் எத்தியோப்பியா நாட்டு பேராசிரியா் கருணாகரன், கல்லூரி நிா்வாக அலுவலா் நிா்மல்ராஜ், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

     உடுமலை, ஜூலை.30-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது. துறைச் செயலருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    துறையின் இணைச் செயலருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்ந்து எடுத்தனர். பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலருக்கான போட்டி நடைபெற்றது.

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்து எடுத்தனர்.இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாகத் துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலர் மற்றும் மகளிர் செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ஆ.யுவராஜ், துணைத்தலைவராக சை.முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக சி.கோகுல்நாத், மகளிர் செயலராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

    தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    • ஆதித்தமிழர் பேரவை கூட்டம் நடந்தது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாடிப்பட்டி

    மதுரை வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் செயற்குழு கூட்டம் வாடிப்பட்டியில் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பேத்செல்வம், நிதிச்செயலாளர், பகலவன், கொள்கை பரப்புச் செயலாளர், சாந்தி முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் சிறுவாலை செல்வபாண்டி வரவேற்றார்.

    தொழிலாளர் பேரவை மாநில செயலாளர் ஈழவேந்தன் பேசினார். மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் கவுரி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதி அழகன், துணைத் தலைவர் சரவணன், கலை இலக்கிய அணி செயலாளர் ஆதிரையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றுவிழா நடத்துவது, மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது.
    • அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார சுகாதார பேரவை கூட்டம் அர்த்தனாரி பாளையத்தில் நடைபெற்றது. சுகாதார பேரவை அட்மா சேர்மன் தனராசு தலைமை வகித்தார். பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அதை தொடர்ந்து அனைவரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா வரவேற்றார். நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் கலந்துகொண்டு திட்ட விளக்க உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் நல்லூர் பொன். விஜய்ராகுல், குன்னமலை பூங்கொடி, கூடசேரி சுப்பிரமணி, பில்லூர் சரண்யா,பிள்ளைகளத்தூர் வனிதா, நடந்தை வசந்தா, மாணிக்கநத்தம் வேலுசாமி, மேல் சத்தம் யோகாம்பிகா உட்பட 20 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், பரமத்தி ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிர மணியன், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், கந்த ம்பாளை யம் அரிமா சரவணன், கந்தம்பா–ளையம் ரிக் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த கேப்டன் துரைசாமி, வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்ப–ணித்துறை அலுவலர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு நகர சுகாதார அலுவலர் டாக்டர் மணிவேல், சுகாதார பணிகள் உதவி திட்ட அலுவலர் டாக்டர் ரமேஷ், மாவட்ட சுகாதார பணிகள் பயிற்சி மருத்துவர் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவி–லியர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரங்கத்தில் அமைக்கப்பட்டி––ருந்த பொது சுகாதாரம், குடும்ப நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், ஐ.சி.டி.சி. போன்ற துறைகளினால் அமைக்கப்பட்ட கண்–காட்சியை பார்வையிட்டனர். டெங்கு, குடும்ப நலம் சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்மொழிவுகள் தீர்மானங்க–ளாக நிறைவேற்றப்பட்டு துணை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    ×