search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டரி கார்கள்"

    • பெண் டிரைவர்கள் நியமனம்
    • முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு டெண்டர் முடிவுக்கு வந்ததாலும் கொரோனே காரணமாகவும் பேட்டரி கார்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தற்போது சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. இதில் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில், சென்னை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன.

    அந்த ரெயில்களில் வரும் பயணிகள், முதியோர் நுழைவு வாயில் செல்ல சிரமப்பட்டனர். எஸ்கலேட்டர், லிப்ட் வசதி இருந்தாலும் பல நேரங்களில் அவை இயங்குவதில்லை. எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பேட்டரி கார் இயக்க டெண்டர் விடப்பட்டது. இது முடிவுக்கு வந்ததும் 2 பேட்டரி கார்கள், நாகர்கோவில் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதனை இயக்க 2 பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று முதல் அந்தக் கார்கள் இயக்கப்பட்டன.

    ஒரு பயணிக்கு ரூ.10 கட்டணத்தில் பேட்டரி கார் இயக்கப்பட்டது. இந்தக் கார்கள், முதல் நடைமேடையில் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பெங்களூரூ மற்றும் சென்னை சிறப்பு ரெயில்கள் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் தான் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது
    • கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி :

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ரெயில் நிலையம் மாவட்ட மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது. இந்த வசதி ஊனமுற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய் பட்டவர் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உதவியாக இருந்து வந்தது. இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    பின்னர் ரெயில்வே துறை இந்த சேவையை கொரோனா காலகட்டத்தில் திடீரென நிறுத்தி விட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பில் நான் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன்.

    இந்த கோரிக்கையின் பயனாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிக்காக ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் நடந்து வருவதா கவும் வெகு விரைவில் இந்த வசதி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வரும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் தெரி வித்துள்ளார். இந்த வசதி வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இந்த வசதி வரும் போது அதன் கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×