search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரிக்கடை"

    • 10 கிலோ குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 45 ). இவர் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று சோதனை செய்ததில் 10 கிலோ குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ குட்காவை கோப்புபடம். செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×