search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு"

    • ரூ.9.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
    • அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

    மதுரை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை கலெக்டர் அனிஷ் சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள பாண்டியன் சூப்பர் மார்க்கெட் ரேஷன் கடையில் தொடங்கி வைத்தனர்.

    அப்போது அந்த ரேசன் கடையில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் 1,263 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று முதல் 4 நாட்களுக்கு வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 30 ஆயிரத்து 339 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

    இந்த பரிசு தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களும் தரமான பொருட்களாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நடவடிக்கை
    • வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தல்

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு கூட்டுறவுத்துறை வாயிலாக பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையொட்டி வழங்கப்படும் பரிசு தொகுப்பு பொருட்களும் கூட்டுறவுத்துறை மூலம் தான் வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கார்டுதாரர்கள் வங்கி கணக்கு சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விவரம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.ஆனால் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதவர்களிடம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உடனடியாக சென்று ஆதார் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்கு எதுவும் இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் பணம் இல்லா வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பான பணிகளை ரேசன் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக நேற்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில் எந்த காரணத்தைக் கொண்டும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்கக்கூடாது.

    வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அவர்களை உடனடியாக வங்கிக்கு சென்று ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி ஆதார் நம்பரை இணைத்து விவரங்களை ரேஷன் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும் எந்த காரணத்தைக் கொண்டும் துறை அலுவலர்கள் ரேசன் கார்டுதாரர்களிடம் ஆதார் அட்டை நகலை பெறக்கூடாது என அறிவித்தப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு பதில் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி இன்னும்  உறுதி செய்யப்படாத நிலையில் ரூ.1000-யை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    ×