என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற விண்ணப்பிக்கலாம்"
- கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
தமிழ்நாடு–பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார–மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான–சிறு தொழில் கடன், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது க்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகாலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் பெண்களுக்கான–புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரைகடனுதவி–வழங்கப்படு கிறது.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க –வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதி க்கப்படுவார்கள்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி க்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு– ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 அயிரம் வரை கடனுத–வி வழங்கப்படுகிறது.
மாவட்ட பி–ற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவுவங்கி–கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்தவிண்ணப்பங்களைசம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
எனவே ஈரோ–டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்-திட்ட அறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
மேற்படி திட்டத்தில் பயன்பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக–விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்