search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்தலைவர்"

    • விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
    • தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தமிழக நாடார் சங்க நிர்வாகிகளுடன் மத்திய விமான போக்கு வரத்துத்துறை செயலாளர் ராஜீவ் பன்சாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலைய கட்டிடத்துக்கு தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் வருகிற 8-ந் தேதி புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலைய கட்டிடத்தில் 'பெருந்த லைவர் காமராஜர் விமான நிலையம்' என்ற பெயர் பலகை இடம்பெற வேண்டும்.

    மற்ற விமான நிலை யங்களில் தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் சென்னை உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில் காமராஜருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைத்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விஜய் வசந்த் எம்.பி.யுடன், தமிழ்நாடு நாடார் சங்கபொதுச் செயலாளர் வி.எல்.சி. ரவி, தலைமை நிலைய செயலாளர் பொன் ராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சுரேஷ்மாறன், மாநில ஒருங்கிணைப்பாளர் அனந்தகுமார், மராட்டிய மாநில் தலைவர் தெய்வ குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடிட குடும்பமாக திரளுவோம் என்று சிலுவை கூறி உள்ளார்.
    • தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும்.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் மற்றும் விருதுநகர், தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ஐ. சிலுவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

    தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜ ரின் பொற்கால ஆட்சியை மீண்டும் மலர செய்ய அடித்தளமாகவும், காமராஜரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு விளக்கிடவும் த.மா.கா. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மதுரை பழங்கா நத்தத்தில் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    விழாவில் மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக பங்கேற்கிறார்கள்.

    தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையை இந்த பொதுக்கூட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் மதுரை மக்கள் அனைவரும் குடும்பத்தோடு வருகை புரிந்து பெருந்தலைவர் காமராஜர் புகழ் பாடிட ஒன்று சேர வேண்டும்.

    தமிழகத்தில் நல்ல மாற்றத்திற்கான அரசியலை விதைத்து வரும் மக்கள் தலைவர் ஜி.கே.வாசனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மதுரை பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாடாக நடத்தி காட்டுவோம், அனைவரும் வாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×