search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்தன்மை"

    கவுரவம், அகந்தையை விட்டுவிட்டு கருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் என தமிழக கவர்னர் தனது பக்ரீத் வாழ்த்தை தெரிவித்துள்ளார். #TamilnaduGovernor #BanwarilalPurohit #Bakrid
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் நமது அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை கூறுகிறேன்.

    நமக்கு இறைவன் தந்த நன்மைகளை ஏழைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த பண்டிகை கற்றுத்தருகிறது. நம்மிடையே உள்ள ஈகோ என்ற கவுரவம், அகந்தை ஆகியவற்றை விட்டுவிட்டு, பிரார்த்தனை பாதையில் சென்று அனைவருடனும் கருணை மற்றும் பெருந்தன்மையுடன் நடக்க வேண்டும் என்று இந்த புனிதத் திருநாளில் நாம் தீர்மானிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Governor #BanwarilalPurohit  #Bakrid

    ×