search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியகுளம் முதியவர் கைது"

    பெரியகுளம் அருகே கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே உள்ள ஜி. கள்ளிப்பட்டி அழகர் கோவில் தெரு பகுதியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேவதானப்பட்டி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பீர்முகமதுவை பெரியகுளம் தென்கரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் விசாரணையில் பீர் முகமது தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும், இவர் மீது அரிசி கடத்தல் சம்மந்தமான வழக்குகள் உள்ளதும், 80வயது முதியவர் என்பதை தனக்கு சாதகமாக்கி கொண்ட பீர் முகமது தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வாங்கி அதை ஒன்று சேர்த்து கேரளா மாநிலத்தை சேர்ந்த அரிசி கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    ×