search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்சில்"

    • நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.
    • விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக சீர்காழி சார்பு நீதிமன்றத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    விழாவிற்கு சீர்காழி வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்க செயலாளர் எஸ்.பி.நெடுஞ்செழியன், மூத்த வக்கீல்கள் செல்வராஜ், சந்திரமோகன், பாலாஜி, சிங்காரவேலன், ராம்குமார், பாலசுப்பிரமணியன், கார்த்திக் ராஜன், கார்த்தி ராதிகா, சுதா, தியாகராஜன் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் எல்.எம்.சி பள்ளி மற்றும் பெஸ்ட் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை சார்பு நீதிமன்ற நீதிபதி மும்தாஜ், நீதித்துறை நடுவர் ரங்கேஸ்வரி ஆகியோர் வழங்கினார்.

    விழாவில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர் சங்க எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்மு டிவில் வக்கீல்கள் சங்கத்தின் பொருளாளர் வக்கீல் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • பென்சில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணி நாகராஜ்.
    • இவர் மாரடைப்பால் இன்று காலமானார்

    இயக்குனர் கெளதம் மேனனிடம் இணை இயக்குனராக இருந்த மணி நாகராஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான "பென்சில்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ஊர்வசி, விடிவி கணேஷ், டிபி கஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


    பென்சில் - மணி நாகராஜ்

    இதையடுத்து கோபிநாத், சீதா, அனிகா சுரேந்திரன், வனிதா விஜய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் "வாசுவின் கர்ப்பிணிகள்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (25-08-2022) காலமானார்.

    இவரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இயக்குனர் மணி நாகராஜ் மறைவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×