என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்ணிடம் பணம் கொள்ளை"
மதுரை:
ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பாவடித் தெருவைச் சேர்ந்தவர் வெஸ்லின். இவரது மனைவி சாந்திமணி. இவர், சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவர் கைப்பையில் 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார்.
மதுரை அருகே பஸ் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சாந்திமணியின் கைப் பையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.
மதுரை வந்திறங்கிய சாந்திமணி, கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போரூர்:
ஈரோட்டைச் சேர்ந்தவர் கமலா. இவர் மதுரவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் மீண்டும் ஈரோடு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் அமர்ந்தார். அப்போது ரூ.80 ஆயிரம் பணத்துடன் கைப்பையை வைத்திருந்தார்.
பஸ் புறப்பட தயாரான போது கைப்பையை காணாமல் கமலா அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் ரூ.80 ஆயிரம் பணத்துடன் பையை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை ரெட்டித் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஷகிலா இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்தம் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் நடைபெற்றது.
இதில் ஷகிலா குழந்தைகளுடன் கலந்து கொண்டார். பின்னர் ஊத்துக்கோட்டைக்கு புறப்பட்டார். அப்போது அவரது பெற்றோர் குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் கொடுத்தனர்.
அதனை ஷகிலா பையில் வைத்து கொண்டு தனியார் பஸ்சில் ஏறி ஊத்துக்கோட்டைக்கு வந்தார். அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்குள்ள கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க பையை திறந்து பார்த்தார். அப்போது ரூ.20 ஆயிரம் இருந்த மணிபர்சை காணவில்லை. செல்போனும் மாயமாகி இருந்தது.
பணம் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து பஸ்சில் பயணம் செய்த போது பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஷகிலா ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்