search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்"

    • இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது.
    • இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா நிலாக்‌ஷி டி சில்வா ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது.

    சில்ஹெட்:

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரையிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் (இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக) 3-வது இடம் பெற்றது. அந்த அணி அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பழிதீர்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (215 ரன்கள்), ஷபாலி வர்மா (161 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (13 விக்கெட்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (7 விக்கெட்), சினே ராணா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.

    இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா (201 ரன்கள்), நிலாக்‌ஷி டி சில்வா (124) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரனவீரா (12 விக்கெட்) கலக்கி வருகிறார்.

    ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. மற்றபடி இறுதி சுற்றில் இந்தியா தோல்வியே சந்தித்தது கிடையாது. மேலும், லீக் ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருப்பதால், இறுதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக உள்ளது.

    அதே நேரத்தில், அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை ஆண்கள் அணி மகுடம் சூடியது போல், இலங்கை பெண்கள் அணியும் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டி.டி.ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
    • தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நாட்டாய பூச்சாதம் 21, நருமோல் சாய்வாய் 21 ரன்கள் எடுத்தனர். அந்த 2 பேரை தவிய யாருமே 2 இலக்க ரன்களை எடுக்கவில்லை. இதில் 3 பேர் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர்.

    இறுதியில் தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பெண்கள் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது.

    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது.
    • அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.

    சில்ஹெட்:

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் காலை முதலாவது அரைஇறுதியில் இந்தியா -தாய்லாந்தை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்களும் கவூர் 36 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தாய்லாந்து அணி விளையாடி வருகிறது.

    • ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார்.
    • வேகப்பந்து வீச்சாளர் பூஜா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி 37 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

    38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மேக்னா களமிறங்கினர். ஷபாலி வர்மா 8 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து வேகப்பந்து வீச்சாளர் பூஜா களமிறங்கினார்.

    மேக்னா- பூஜா ஜோடி சிறப்பாக விளையாடி 6 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். மேக்னா 20 ரன்னிலும் பூஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

    முதல் விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா- மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.

    16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கடைசி ஓவரில் தீப்தி சர்மா (10) ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • வங்காள தேசத்திற்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    பாகிஸ்தானுடன் நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக இன்று இந்திய அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கவூர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக மந்தனா செயல்படுகிறார்.

    வங்காளதேசம் அணி:-

    முர்ஷிதா கதுன், ஃபர்கானா ஹோக், நிகர் சுல்தானா, ரிது மோனி, லதா மொண்டல், ஃபஹிமா கதுன், ருமானா அகமது, நஹிதா அக்டர், சல்மா காதுன், ஃபரிஹா ட்ரிஸ்னா, ஷஞ்சிதா அக்டர்.

    இந்திய அணி:-

    ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, சப்பினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், கிரண் நவ்கிரே, பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, சினே ராணா, ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்.

    • பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இந்திய அணியை சேர்ந்த ரிச்சா கோஷ் 3 சிக்சர்களை பறக்கவிட்டார்.

    சில்கெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதிகப்பட்சமாக ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

    19.4 ஓவர் வரை விளையாடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் பேட்டிங்கில் அரை சதம் அடித்த நிதா தார் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    • பாகிஸ்தான் அணியின் நிதா தார் அரை சதம் அடித்தார்.

    சில்கெட்:

    சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 33 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் திணறியது.

    அதனையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மரூப் - நிதா தார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். அதிகப்பட்சமாக நிதா தார் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்தது.

    இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3, பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன.

    சில்கெட்:

    வங்கதேசத்தில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடந்து வருகிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில் இன்று சில்கெட்டில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

    ஆடும் லெவனில் விளையாடும் இந்திய வீராங்கனைகள்:-

    ஸ்மிருதி மந்தனா, மேக்னா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்

    ஆடும் லெவனில் விளையாடும் பாகிஸ்தான் வீராங்கனைகள்:-

    முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சோஹைல், அய்மான் அன்வர், சாடியா இக்பால், துபா ஹாசன், நஷ்ரா சந்து


    • வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த மலேசியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மலேசியா - வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை 129 ரன்கள் எடுத்தது.

    முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா ஆகியோர் அரை சதம் அடித்தனர். மலேசியா அணி தரப்பில் சாஷா ஆஸ்மி, மஹிரா இஸ்ஸாதி இஸ்மாயில், வினிஃப்ரெட் துரைசிங்கம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி களமிறங்கியது. வங்காள தேச அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். 18.5 ஓவர்கள் தாக்கு பிடித்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 மட்டுமே எடுத்தது.

    இதனால் வங்காள தேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்களாதேச அணி தரப்பில் ஃபரிஹா திரிஸ்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இந்திய வீராங்கனை ஜெமிமா 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.
    • இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    சில்கெட்:

    ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன் எடுத்தார்.

    இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

    சில்கெட்:

    7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்-தாய்லாந்து, இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் 4 தொடர் ஒருநாள் போட்டி (50 ஓவர்) வடிவில் நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்த போட்டி20 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த 20 ஓவர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 113 ரன் இலக்கை வங்காளதேச அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து 'திரில்' வெற்றியை ருசித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு நடக்க இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 8-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்காளதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

    காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வங்காளதேச அணி, தாய்லாந்தை சந்திக்கிறது. நிகார் சுல்தானா தலைமையிலான வங்காளதேச அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தகுதி சுற்றில் சாம்பியன் பட்டத்தை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் காணுகிறது. நருமோல் சைவாய் தலைமையிலான தாய்லாந்து அணி, வலுவாக உள்ள வங்காளதேசத்தின் சவாலை சமாளிப்பது கடினம் தான். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    இதில் 5 தடவையும் வங்காளதேச அணியே வென்று இருக்கிறது. பகல் 1 மணிக்கு தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி சூப்பர் பார்மில் இருக்கிறது.

    இலங்கை அணியை பொறுத்தமட்டில் கேப்டன் சமாரி அட்டப்பட்டுவையே அதிகம் நம்பி இருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்திய அணியின் கையே ஓங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்தியா 16 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    ×