என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் தீயில் கருகி பலி"
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணி மனையில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கு அகல்யா (வயது 26) என்ற மனைவியும். யோகித் (3) என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று அகல்யா சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்எண்ணையை ஊற்றினார்.
அப்போது அகல்யாவின் சேலையில் மண்எண்ணை சிதறியது. இதை அறியாத அகல்யா அடுப்பை பற்றி வைத்தார். அப்போது அகல்யாவின் சேலையில் தீப்பிடித்தது.
அந்த தீ அகல்யாவின் உடலிலும் பற்றி எரிய தொடங்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து அகல்யாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டனர்.
இருப்பினும் அகல்யாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம் கபாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அகல்யா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்