search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டி கடை கொள்ளை"

    ஆண்டிப்பட்டி அருகே பெட்டி கடையை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொம்மையசாமி (வயது35). இவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தான் வாங்கிய நபரிடம் பணத்தை திருப்பி தருவதற்காக ரூ.1 லட்சம் பணத்தை கடையில் வைத்திருந்தார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து பொம்மையசாமி வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மோப்பநாய் வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டிப்பட்டி பகுதியில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    ×