search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டான் நாட்டு ராஜமாதா"

    பூட்டான் நாட்டின் ராஜமாதாவும் தற்போதைய மன்னரின் தாயாருமான டோர்ஜி வாங்மோ இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    புதுடெல்லி:

    பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகளை ஜிக்மே சிங்யே வாங்சுக் திருமணம் செய்து கொண்டார்.

    1972-ம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மன்னராக இருந்த இவர் தனது மூத்த மகனான ஜிக்மே கேஷர் நாம்கியெல் வாங்சுக் பதவிக்கு வர வேண்டும் என விரும்பி கடந்த 2006-ம் ஆண்டில் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பூட்டானின் அண்டைநாடான இந்தியாவுடன் அந்நாட்டுக்கு உள்ள 25 ஆண்டுகால நட்புறவை விளக்கும் வகையில் இந்தியாவில் ‘பூட்டான் வாரம்’ கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தை இந்திய மக்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் பூட்டான் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக பூட்டான் நாட்டின் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக்-கின் முதல் மனைவியும், தற்போதைய மன்னரின் தாயாரும், அந்நாட்டின் ராஜமாதாவுமான கியாலியும் டோர்ஜி வாங்மோ வாங்சுக் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். #BhutanQueenMother #PresidentKovind
    ×