search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்குழி இறங்கிய பக்தர்கள்"

    • அம்மன் பூஞ்சோலையில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பூக்குழியில் காமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, பாளையங்கோட்டை கிராமத்துக்கு உட்பட்ட காமன்பட்டியில் முத்துமாரியம்மன் மண்டு கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 9-ந்தேதிதிருவிழா தொடங்கியது.

    இதில், அம்மனுக்கு 48 நாட்கள் பூஜைகளுக்கு பிறகு 3 நாள் திருவிழா தொடங்கியது. இதில் நேற்று இரவு அம்மன் பூஞ்சோலையில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தங்கக் கொடிமரம் அபிஷேகம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று அதிகாலை அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் காமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நாளை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஊர் சார்பாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. மேலும், மஞ்சள் நீராடுதல், வேஷம் போட்டு ஆடுதல், நிகழ்ச்சிகளும் அம்பாளுக்கு தீர்த்தவாரியும் நடைபெற்று தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

    இத்திருவிழாவில் இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் பெருமாள்சாமி, ஊர் நிர்வாகி அழகுமலை, பூசாரிகள் பாலசுப்பிரமணி, காமாட்சி மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×