என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புளோரன்ஸ் புயல்
நீங்கள் தேடியது "புளோரன்ஸ் புயல்"
அமெரிக்காவின் கடலோர பகுதிகளை சுமார் 100 கிமீ வேகத்தில் தாக்கிய புளோரன்ஸ் புயல் வலுவிழந்து முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. #HurricaneFlorence
வாஷிங்டன் :
அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.
இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கைப்பட்டதால், புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து 3 மாகாணங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள சிறைச்சாலைக் கைதிகள் 1000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
மேலும் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. சுமார் 100 கிமீ வேகத்தில் வீசிய இந்த புயலால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து, கரையோர பகுதிகளை தாக்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடானது.
புயல் காரணமாக வடக்கு கரோலினாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆயிரம் 2 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்பட்ட புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது. 12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என கணிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் வலுவிழந்தாலும் வடக்கு கரோலினா,ஜார்ஜியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளில் அறிவிக்கபட்ட அவசரநிலையை அரசு விலக்கிகொள்ளவில்லை.
புளோரன்ஸ் புயல் வலுவிழந்தாலும், முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #HurricaneFlorence
அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது.
இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கைப்பட்டதால், புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து 3 மாகாணங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தெற்கு கரோலினாவில் அமைந்துள்ள சிறைச்சாலைக் கைதிகள் 1000க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
மேலும் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. சுமார் 100 கிமீ வேகத்தில் வீசிய இந்த புயலால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து, கரையோர பகுதிகளை தாக்கியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடானது.
புயல் காரணமாக வடக்கு கரோலினாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆயிரம் 2 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்பட்ட புளோரன்ஸ் புயல் வலுவிழந்தது. 12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும் என கணிக்கப்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். புயல் வலுவிழந்தாலும் வடக்கு கரோலினா,ஜார்ஜியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளில் அறிவிக்கபட்ட அவசரநிலையை அரசு விலக்கிகொள்ளவில்லை.
புளோரன்ஸ் புயல் வலுவிழந்தாலும், முதலாம் வகை புயலாக மாறியிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #HurricaneFlorence
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X