search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித செபஸ்தியார் கெபி"

    • அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார்.
    • திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் கெபித்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி புனித செபஸ்தியார் கெபி அலங்கரிக்கப்பட்டு பனிமயமாதா பேராலாய பங்கு தந்தை ஆசி வழங்கினார். பின்னர் 12 மணி அளவில் அன்னதானத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை குமாரராஜா தொடங்கி வைத்தார். இதில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ரவி, குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சைலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் ஜெபமாலை நிகழ்ச்சி நடைபெற்றது. 40-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவருமான எட்வின் பாண்டியன் தலைமை தாங்கினார். குரூஸ் பர்னாந் நற்பணி மன்ற செயலாளர் சசிகுமார், வர்கிஸ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குருஸ் பர்னாந் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்ட் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனித செபஸ்தியாரின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியை சேர்ந்த பிராங்ளின், டெரன்ஸ், சுரேஷ் , பிரவீன், பிரபாகர், சாமி வளன், ஸ்வீட்டஸ், மற்றும் வெர்ஜினியா உள்ளி ட்டோர் செய்திருந்தனர். வளன் நன்றி கூறினார்.

    ×