search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்துணர்வு முகாம்"

    • முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் வழங்கப்படும்
    • முகாமின் முடிவில் ஒவ்வொரு யானையும் சுமார் 300 முதல் 400 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த யானைகள் கோவில் விழாக்களில் சாமி சிலைகளை சுமந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இந்த யானைகள் பங்கேற்கின்றன.

    இதில் குருவாயூர் தேவசம்போர்டு சார்பில் உள்ள கோவில்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த யானைகள் மதம் பிடிக்காமல் இருக்கவும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இயல்பாக பழகவும் அவற்றிற்கு ஆண்டுதோறும் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாம் நடத்தப்படும்.

    கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த குருவாயூர் தேவசம்போர்டு முடிவு செய்தது.

    அதன்படி புன்னத்தூரில் குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கி உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்த முகாமுக்கு தேவசம் போர்டு நிர்வாகம் ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் வழங்கப்படும். இதுபற்றி கால்நடை மருத்துவ குழுவினர் கூறும்போது, மழை காலத்தில் தான் இந்த முகாம் நடைபெறும். இப்போது மழை காலம் என்பதால் முகாம் தொடங்கி உள்ளது.

    முகாமில் யானைகளுக்கு வைட்டமின் உணவுகள், இரும்பு டானிக், அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளும் அளிக்கப்படும்.

    முகாமின் முடிவில் ஒவ்வொரு யானையும் சுமார் 300 முதல் 400 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும் என்றனர்.

    ×