search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதர்மண்டி"

    • சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அதிக வருவாய் கிடைக்கும் ரெயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், கோவை, மும்பை போன்ற பெரு நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதால் கூட்டம் எப்பொழுதும் அதிகமாக காணப்படும். காலை, மாலை நேரங்களில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு செல்பவர்கள் ரெயில்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக உள்ள ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும்.

    இந்த ரெயில் நிலையத்தில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினமும் பயணம் செய்து வருகி றார்கள். ஆனால் ஆரல்வா ய்மொழி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    பிளாட்பாரங்களில் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். முட்பு தருக்குள் விஷ ஜந்துக்கள் இருந்தால் கூட தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது ரெயில் பயணிகளையும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மார்க்க மாகவும் அதிக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவ னந்தபுரத்திற்கு காலை நேரங்களில் பாசஞ்சர் ரெயிலும் செல்கிறது. இந்த ரெயில்களை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மார்க்கமாக உள்ள ரெயில் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதாக ரெயில் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இரணியல், பள்ளியாடி, குழித்துறை ரெயில் நிலை யத்தில் அதிக அளவு முட்பு தர்கள் உள்ளது. அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது.
    • மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை திருப்பூர் சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது. இதன் பின்புறம் புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது .

    புதர் நிறைந்த இந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள்.
    • இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ெரயில்வே குடியிருப்பு பகுதிகளில் ரெயில்வேயில் பணியாற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடக்கிறது. இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .இரவு நேரங்களில் பாம்புகள் வந்துவிடுகிறது.

    இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றார்கள். எனவே இங்குள்ள புதர்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .
    • புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாண்டியன் கரடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மழைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாததால் அவதிப்பட்டு வரும் நிலையே உள்ளது. இந்த பகுதிகளுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

    இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அருகில் உள்ள தேவனூர், புதூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு உள்ள மயிலாடும்பாறை கருப்பராயன் கோவில் பேருந்து நிறுத்தம் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது .இங்குள்ள பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் முள் புதர்கள் மற்றும் களைச் செடிகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் பஸ் நிறுத்தத்தின் ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்து கிடப்பதால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் தெருவிளக்கு வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பஸ் நிறுத்தத்தை சீரமைக்கவும் புதர்களை அகற்றி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பூங்காவுக்குள் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கிடக்கிறது.
    • இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்குட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. முன்பு இந்த பூங்காவில் பூ செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பூங்காவிற்குள் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.

    அத்துடன் பூங்காவுக்குள் குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர் மண்டிக்கிடக்கிறது. அதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் உள்ளதாகவும் அவை அந்த பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனால் இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி செடிகளை வளர்த்த நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×