search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் முதல் மந்திரி"

    பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதை கண்டித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் காங்கிரஸ் இளைஞர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #YouthCongress #BiharCM #NitishKumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    காவல்துறையை தனது முக்கிய இலாகாவாக வைத்திருக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார், அதிகரித்துவரும் இந்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், அம்மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் இன்று காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். முதல் மந்திரியை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதிஷ்குமார் வீட்டை நோக்கி முன்னேறி சென்றனர்.



    போலீசார் லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #YouthCongress #BiharCM #NitishKumar
    ×