search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிலிப்பே கவுட்டினோ"

    100 போட்டியில் விளையாடினால் லிவர்பூல் அணிக்கு 17 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்பதால், இந்த சீசனில் கவுட்டினோவை பார்சிலோனா டிரான்ஸ்பர் செய்யும் எனத் தெரிகிறது.
    பிரேசில் கால்பந்து அணியின் சிறந்த வீரர் பிலிப்பே கவுட்டினோ. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 106 மில்லின் பவுண்டுக்கு பார்சிலோனா வாங்கியது. அப்போது சில நிபந்தனைகள் கூடுதலாக சில 36 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    அதில் ஒன்று பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 100 போட்டிகளில் பங்கேற்றால் 17 மில்லியன் பவுண்டு லிவர்பூல் அணிக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.



    தற்போது வரை பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 71 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசன் முடிந்தவுடன் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அப்போது கவுட்டினோவை வெளியேற்றாவிடில், அடுத்த சீசனில் அவர் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

    இதனால் கவுட்டினோவை 17 மில்லியன் பவுண்டுக்காக பார்சிலோனா வெளியேற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    பிலிப்பே கவுட்டினோவிற்கு 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கும் பிஎஸ்ஜி விருப்பத்தை ஏற்க மறுத்தது பார்சிலோனா. #Barcelona #PSG
    பிரான்ஸ் நாட்டின் கால்பந்த் கிளப் அணியான பிஎஸ்ஜி மிகப்பெரிய பணக்கார கிளப் அணியாகும். இந்த அணி கடந்த சீசனில் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லின் பவுண்டு கொடுத்து பிரேசில் வீரர் நெய்மரை பார்சிலோனாவில் இருந்து வாங்கியது.

    நெய்மர் சென்றதால் லிவர்பூல் அணியில் விளையாடிய மற்றொரு பிரேசில் வீரரான பிலிப்பே கவுட்டினோவை 142 மில்லியன் பவுண்டு கொடுத்து பார்சிலோனா வாங்கியது.

    கவுட்டினோ கடந்த 2-வது பாதி நேரத்தில் 22 போட்டிகளில் 10 கோல் அடித்துள்ளார். 6 கோல் அடிக்க துணைபுரிந்துள்ளார். தற்போது கவுட்டினோவை வாங்க பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக 239 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருப்பதாக பார்சிலோனாவிற்கு ஆசை தூதுவிட்டது.



    6 மாதத்திலேயே சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்றாலும், பார்சிலோனா மறுத்துவிட்டது. தற்போது கவுட்டினோவின் டிரான்ஸ்பர் விலை 352 மில்லியன் பவுண்டு எனவும் உயர்த்திவிட்டது.

    ஏற்கனவே பிஎஸ்ஜி அணி வீரர்கள் டிரான்ஸ்பரில் விதிமுறையை மீறியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த டிரான்ஸ்பர் நடப்பதில் சந்தேகமே.
    எல்லோரும் நெய்மரை பற்றி பேசுகையில், பிலிப்பே கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என ரொபேர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார். #WolrdCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகள் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நெய்மர், பிலிப்பே கவுட்டினோ, கேப்ரியல் ஜீசஸ், மார்சிலோ போன்ற வீரர்கள்தான்.

    நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரால் உலகக்கோப்பையில் விளையாட முடியுமா? என்ற நிலை இருந்தனர். ஆனால் உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார்.

    நெய்மர் விளையாடினால்தான் பிரேசில் அணி வெற்றி பெறும் என்று அனைவரும் கணித்தார்கள். பிரேசில் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் பிலிப்பே கவுட்டினோதான் கோல் அடித்தார்.

    அதேபோல் கோஸ்டா ரிகாவிற்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றது. இதில் முதல் கோலை கவுட்டினோதான் அடித்தார். அனைவரும் நெய்மரை பற்றி பேசுகையில் பிலிப்பே கவுட்டினோ தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று முன்னாள் பிரேசில் வீரர் ரொபெர்டோ கார்லஸ் தெரிவித்துள்ளார்.



    2002-ம் ஆண்டு உலகக்கோப்பையை பிரேசில் வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தவர் கார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கார்லஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொருவரும் நெய்மரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிரேசில் அணிக்கான சிறப்பான வீரர் என்பதை கவுட்டினோ நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து தடுப்பாட்டக்காரர்களும் நெய்மர் மீது கவனம் செலுத்தும்போது, கவுட்டினோ மேலெழுந்து, போட்டியை முடிவு செய்கிறார்’’ என்றார்.
    ×