search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த நாள் பரிசு"

    பிறந்தநாளுக்கு தந்தை பரிசு தரவில்லை என்பதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை சாமநத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகள் அழகுசந்தியா (வயது 14) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அழகுசந்தியா கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடினார். அன்றைய தினம் மகாராஜன் திருப்பதிக்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அழகுசந்தியா, ‘என் பிறந்தநாளுக்கு அப்பா பரிசு தராமல் திருப்பதிக்கு சென்று விட்டாரே’ என மனவேதனை அடைந்தார். தனது உள்ளக்குமுறலை குடும்பத்தினரிடம் கூறி புலம்பினார்.

    இந்த நிலையல் அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். உறவினர்கள் அவரை காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகுசந்தியா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×