என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரனீத் கவுர்"
- பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
- காங்கிரசில் இருந்து விலகிய இவர் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங். இவரது மனைவி பிரனீத் கவுர். முன்னாள் மத்திய மந்திரியான இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில், பிரனீத் கவுரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்று அறிவித்தது.
கட்சிவிரோத நடவடிக்கைகளுக்காக அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி பிரனீத் கவுருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் செயலாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான தாரிக் அன்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '
பா.ஜ.க.வுக்கு உதவும் கட்சி விரோத நடவடிக்கைகளில் பிரனீத் கவுர் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறினர். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட அந்த புகாரை பரிசீத்ததன் முடிவில், பிரனீத் கவுரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்றும், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்