search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாரம் ஓய்ந்தது"

    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் 91 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளிலும், 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. #LokSabhaElection
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந்தேதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

    அந்த மாநிலங்களிலும் அவற்றின் தொகுதிகள் எண்ணிக்கையும் வருமாறு:-

    ஆந்திரா-25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர்-2, மராட்டியம்-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தலை நாளை சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

    மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

    ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், இவற்றில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

    சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடக்கிற ஆந்திராவில், ஆட்சியை தக்க வைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் ஆட்சியை அவரிடம் இருந்து பறிப்பதற்கு ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் பெயரளவில்தான் களத்தில் உள்ளன.

    அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா, பாரதீய ஜனதாவுக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.

    ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    சிக்கிமில் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) ஆட்சி நடக்கிறது. அங்கு சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

    91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச்செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்து விடாதபடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையாடினர். நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. #Rajasthan #Telangana #AssemblyElection #Campaigning
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது.

    ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் நாளை (7-ந் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.



    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுக்கும் முக்கியமானது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதாவும், கைப்பற்றுவதற்கு காங்கிரசும் வரிந்து கட்டுகின்றன. இங்கு ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது. 199 தொகுதிகளில் மட்டுமே நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.



    ராஜஸ்தானில் 2,188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் முடிவாகும்.

    பிரதமர் மோடி நேற்று அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் செய்து, பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். சுமர்பூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் அவர் ஆவேசமாக பேசினார்.

    119 இடங்களை கொண்டுள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாரதீய ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு 1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மல்காஜ்கிரி தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஆட்சியை தொடர்வதற்கும், காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணியும், பாரதீய ஜனதாவும் ஆட்சியை கைப்பற்றுவதற்கும் கடும் போட்டியில் உள்ளன.

    அங்கு சூரியபேட் மாவட்டம், கொடாட் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் தோன்றிப் பேசினார்கள். அவர்கள் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினர்.

    2 மாநிலங்களிலும் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவெளி இன்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

    நாளை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.

    5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் அந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்து விடும். #Rajasthan #Telangana #AssemblyElection #Campaigning 
    பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. #Pakistanelection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது.

    பாகிஸ்தான் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 3,675 பேர், மாகாண சட்டசபை தேர்தல்களில் 8,895 பேர் என மொத்தம் 12,570 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களில் 3 வேட்பாளர்கள் உள்பட 180 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். #Pakistanelection
    ×