search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவத்தில் மூளைச்சாவு"

    வேலூரில் பிரசவத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளம்பெண் உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது.

    வேலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ் என்ஜினீயர் இவரது மனைவி கோகிலா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு உடல்நிலை காரணமாக 7-வது மாதத்தில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 7 நாட்களுக்கு முன்பு பிரசவமானது. அப்போது கோகிலாவுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதயம் சென்னை மலர் ஆஸ்பத்திரிக்கும் கிட்னி, கண்கள், ஆகியவை சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கினர்.

    ×